K U M U D A M   N E W S

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

TVK Vijay: போலீஸாரிடம் இருந்து பறந்த மெசேஜ்... தவெக மாநாடு பணிகளை ரகசியமாக கண்காணிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்கு பதிய அனுமதி வேண்டும்... ஆளுநரிடம் சென்ற பாஜக

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

This Week OTT Release: மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

தீபாவளி பலகாரங்கள்னால உடல் எடை கூடும்னு பயமா? கவலையே வேணாம்.. இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணுங்க!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் என்ற பயன் சிலருக்கு தோன்றும். இதனை தவிர்க்க சில டிப்ஸ்-களை பகிந்துள்ளார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா .

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!

“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.