விரைவுச் செய்திகள் | 21-09-2024 | Tamil News | Today News
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
வெற்றிக் கொடி கட்டுமா நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாடு என்னும் கேள்வி எழுந்துள்ளது.
SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்
உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் உணவை உட்கொண்ட சிறுமி உட்பட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்ததை கண்டறிந்து கடைக்கு சீல் வைத்தனர்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 57 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் கடந்த 5 நாட்களில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.