K U M U D A M   N E W S

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

‘தக் லைஃப்’ செய்த தக்காளி.. இரவே அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. சென்னையில் காய்கறி தட்டுப்பாடு

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

எந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’?.. வானிலை மையம் சொல்வது என்ன?

நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு

கனமழை எதிரொலி... தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கையால் கடலூரில் உள்ள அண்ணாமலை பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு; தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அண்ணாமலை பல்கலைக்கழகம்

#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் கொடுத்த ரெட் அலர்ட்... சென்னை விரைந்த பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகள் முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை வட சென்னை மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.