K U M U D A M   N E W S
Kumudam Ad

கழிவறை மேற்கூரை இடிந்து விபத்து.. சாலை மறியலில் குதித்த மாணவர்கள்... புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரிக்கும் அடித்ததா அபாயா மணி..? அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் குவிந்த மீட்பு படை வீரர்கள்.. கனமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்

பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

கூல் லிப் பாக்கெட்டில் ஏன் மண்டை ஓடு படம் இல்லை - நீதிமன்றம் கேள்வி

மாணவர்கள், இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரிய வழக்கில், கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க எம்மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என மத்திய, குட்கா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

"வடகிழக்கு பருவமழை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.." - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணைய தொடங்குங்க... நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்ய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.