K U M U D A M   N E W S

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையால் ஒழுகும் ஊராட்சி மன்ற அலுவலகம்... வெளியான வீடியோவால் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரையில் பயன்பாட்டுக்கு வந்த தாழ்தள பேருந்து.. எந்தெந்த ரூட்டுகளில் இயக்கப்படும்.. வெளியான தகவல்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

”எங்க சார் தப்பு பண்ணல” போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயிலை பூட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”சுள்ளான்கள எல்லாம் அடுத்த எம்ஜிஆர்-னு சொல்றாங்க..” தவெக விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த பிரபலம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பங்கமாக கலாய்த்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் 30 நாட்கள் கூட அரசியலில் தாக்குப்பிடிக்க மாட்டார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

குஷியில் கோவை மக்கள்.. முழு கொள்ளளவை எட்டவுள்ள சிறுவாணி அணை

கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தவெக முதல் மாநில மாநாடு... தொடங்கிய கலந்தாய்வு கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்.. அரசுக்கு கோரிக்கை வைத்த மக்கள்

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Ramadoss: ”இது அப்பட்டமான இந்தி திணிப்பு..” மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராமதாஸ்!

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை நடத்துக் கூடாது, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மீண்டும் தொடங்கியது மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.