K U M U D A M   N E W S

வெளுக்கப்போகும் கனமழை... தீபாவளிக்கு வெடி எல்லாம் புஸ்.. ஆகிடுமோ?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 30) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.

TVK Vijay: பாஜக போல திமுக அரசும் பாசிசம் தான்... விஜய் சொன்னது சரி... ஜெயக்குமார் தக் லைஃப்!

மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம் தான்; பாசிசம் அல்லாமல் பாயாசமா? நடிகர் விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

“அமரனில் நடித்தது வாழ்நாள் பாக்கியம்... விஜய்க்கு கோடான கோடி நன்றி..”: சிவகார்த்திகேயன் Exclusive

அமரன் படத்தில் நடித்தது பற்றியும் மேஜர் முகுந்த வரதராஜன் குறித்தும் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் பற்றி குமுதம் செய்திகளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை தற்போது பார்க்கலாம்.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மரியாதை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விஜய்க்கு கோபம் வரவைக்க அஜித்துக்கு வாழ்த்து.. தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

விஜய்க்கு கோபம் வரவைப்பதற்காக அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து சொல்லியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மீனவர்கள் கைது விவகாரம்... முதலமைச்சர் கொடுத்த பளிச் பதில்

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அதன்பின் உரையாற்றிய அவர், தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம்; மத்திய அரசும் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். 

வாங்க முடியாத அளவுக்கு எகிறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனையாகிறது.