K U M U D A M   N E W S

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்....

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி..

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் யாரோ எழுதிய வசனத்தை பேசியவர்; அரசியல் அறிவு கிடையாது - நல்லசாமி அதிரடி

யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய் என்றும் அவருக்கு அரசியல் அறிவு கிடையாது என்றும் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாசம் வந்தாச்சு... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"மிக கனமழை" பயமுறுத்தும் கடல்.. "மிஸ் ஆகாது கண்டிப்பா நடக்கும்.."

சென்னை, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.