K U M U D A M   N E W S

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வைகோவுக்கு சீட் தரல.. வருத்தம் தான்: துரைவைகோ ஓபன் டாக்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

MLA பதவி ராஜினாமாவா? பாமக உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு

பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பா- அம்மாவிடம் சொல்லுங்க.. கல்வி விருது விழாவில் கொக்கி போட்ட விஜய்

சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

MK Azhagiri Speech | தம்பியை பாராட்டிய மு.க.அழகிரி | Mayor Muthu Statue in Madurai | CM MK Stalin

MK Azhagiri Speech | தம்பியை பாராட்டிய மு.க.அழகிரி | Mayor Muthu Statue in Madurai | CM MK Stalin

அய்யா குலதெய்வம்.. அன்புமணி எதிர்க்காலம்: பதவி விலகிய முகுந்தன்

பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்

கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்- தவெக தொண்டர்கள் வரவேற்பு

’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆடை கிழிப்பது.. பூட்ஸ் காலால் உதைப்பது.. இது மக்களாட்சியா? விஜய் கண்டனம்

’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.