NLC Power Plant Demolition என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் இடிப்பு
கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.
கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து சுரங்க நிர்வாக அலுவலகத்திற்கு பேரணி சென்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது