K U M U D A M   N E W S

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 03-10-2024

இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.

எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.. ஆனால் சாத்தியம் இல்லை.. அமைச்சர் ரகுபதி சொன்ன விஷயம்

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

#BREAKING : 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு. 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை செங்கல்பட்டு பகுதியில் போலீசார் தீயிட்டு அழித்தனர்

கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சிக்கிய கஞ்சா.. சம்பவம் செய்த போலீஸ்...

போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2950 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது