K U M U D A M   N E W S

minister

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை.. குழப்பத்தில் திமுக தலைவர்கள்.. ராஜன் செல்லப்பா தாக்கு

Magalir Urimai Thogai Scheme : இந்த 2 திட்டங்களால் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : ''தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Vairamuthu : வைரமுத்துக்கு 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' பட்டம்.. மதுரை தமிழ் இசைச் சங்கம் வழங்கியது!

Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : ''எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

Dengue Fever in Tamil Nadu : 'டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்' - மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : ''சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

CM Stalin : 'இனி விண்வெளியில் அரசு பள்ளி மாணவர்களின் ஆட்சி'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Tamil Nadu Govt School Students : ''2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர். 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘வெண்கல மங்கை’ மனு பார்க்கர் உடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..

PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

எச்சில் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிறவிகள் நாங்கள் அல்ல... அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.