K U M U D A M   N E W S

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி... சிக்கியது எப்படி?

விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.

மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்

ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

Indian2: கடைசி நேரத்தில் இந்தியன் 2 ரிலீஸுக்கு சிக்கல்... கமல், ஷங்கரை விடாமல் துரத்தும் பஞ்சாயத்து

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பட்டியலில் 261 பாஜக தலைவர்கள்; 1977 வழக்குகள் - பட்டியல் போட்ட செல்வபெருந்தகை

செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் - பண மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை... திமுக மீது குற்றச்சாட்டு... பா ரஞ்சித்துக்கு போஸ் வெங்கட் அட்வைஸ்

பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்த இயக்குநர் பா ரஞ்சித், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து பா ரஞ்சித்துக்கு நடிகர் போஸ் வெங்கட் அட்வைஸ் செய்துள்ளார்.

இது ஒரு தொடர்கதை... டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.