"கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலின் ஜுஜூபி” - செல்லூர் ராஜு தாக்கு
கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.
ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ்போகத்தை, இந்தியத் தடகள விளையாட்டு வீராங்கனையும் பி.டி. உஷா நேரில் சந்தித்து உரையாடினார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில், சதி இருப்பதாக குத்துச் சண்டை வீரர் விஜேந்திர சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.