K U M U D A M   N E W S
Advertisement

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரன் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

ஏழு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரன் சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை - தமிழக அரசு அதிரடி

சென்னை - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்க தமிழக அரசு திட்டம்.

போதைப்பொருள் வழக்கு.. ஐந்து பேர் அதிரடி கைது.. உபகரணங்கள் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நான்கு போதை மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

அறிவிப்புப் பலகையில் மோதிய அரசுப் பேருந்து - 8 பேரின் கதி?

குன்னூர் அருகே நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புப் பலகையில், அரசுப் பேருந்து மோதி விபத்து - 8 பேர் காயம்

வேண்டவே வேண்டாம்.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. கொட்டிய மழை அளவு தெரியுமா! 

நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.

இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது 

முழு கொள்ளளவான 47.50 அடியில் 47.40 அடியை எட்டிய ஏரி.

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நீதிபதி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.