K U M U D A M   N E W S

Thaadi Balaji: “ரஜினி சார் பத்தி பேசினது பழைய வீடியோ... உண்மை என்னன்னா..?” தாடி பாலாஜி அடடே விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில், அதுகுறித்து நடிகர் தாடி பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தி திணிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார். 

மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Game Changer: விட்டதை பிடித்த ஷங்கர்... ராம்சரணின் கேம் சேஞ்சர் ஓடிடி ரைட்ஸ்... இத்தனை கோடியா?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்..' சர்ச்சையான விவகாரம்... காவல் ஆணையர் விளக்கம்

ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார்.