K U M U D A M   N E W S

4 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு

பல்வேறு மண்டலங்களின் அதிகாரிகளும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Anti Labour Scheme : தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anti Labour Scheme in Tamil Nadu : விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படியே: தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : நீர்நிலை பாதுகாவலர் விருது.. வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷய்யன் நியமனம்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகள் பணியாற்றிய சுதா சேஷய்யன், இலக்கியவாதி, ஆன்மீகப் பேச்சாளார் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக முகம் கொண்டவர்.

"Cool Lip-ஐ ஏன் தடை செய்யக்கூடாது?" - நீதிமன்றம் அதிரடி கேள்வி

இந்தியா முழுவதும் Cool Lip-ஐ ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது 

கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.