K U M U D A M   N E W S

ஆளுநரா? ஆரியநரா? - தமிழ்த்தாய் வாழ்த்தில் விடப்பட்ட திராவிட நல் திருநாடு.. முதலமைச்சர் கண்டனம்

சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார். 

மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு.. பாஜக எம்பிக்கு சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வயநாடு தேர்தலில் போட்டியா..? குஷ்பூ விளக்கம்

வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.