K U M U D A M   N E W S

Harry Brook : இவ்வளவு சின்ன வயசிலேயே இப்படி ஒரு சாதனை!.. இங்கிலாந்து கேப்டன் அபாரம்

Harry Brook New Record : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அபார சாதனை படைத்துள்ளார்.

தினம் தினம் ஒரு பஞ்சாயத்து....எப்படி இருந்த பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கனியாமூர் பள்ளி மாணவியின் தாய் மாமன் அதிரடி கைது.. பரபரப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் அவரது தாய் மாமன் செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் அவரை கைது செய்துள்ளதாக தகவால் வெளியாகியுள்ளது

பிக்பாஸ் செட்டில் தொழிலாளிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. விரைந்த போலீஸ்..

சென்னை அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயர்த்தில் நபர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசை சாடிய ஆர்.பி.உதயகுமார்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 ஊயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொல்லை கொடுக்கும் நெல்லை...பள்ளியில் அரிவாளுடன் மாணவன்

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம்  டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஓடும் ரயிலில் தடுமாறி விழுந்த பயணி...திக் திக் நிமிடங்கள்

ராமநாதபுரத்தில் ரயிலில் இறங்கும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி

மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம் – தலைமை ஆசிரியர்கள் மீண்டும் பணியிட மாற்றம்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.