பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்
இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி மகன் சூர்யா, பாக்கெட் மணி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வந்தது. இதுகுறித்து இயக்குநர் சேரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் உள்ள தனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, தொண்டர்களிடம் சாப்பிட்டு வரச் சொல்லி கூலாக சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.