K U M U D A M   N E W S

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீர்?... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கெளதம் கம்பீர் அதிகமாக கோபப்பட கூடியவர். எதிலும் அதிரடியாக முடிவெடுக்க கூடியவர் என்பதால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஒத்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பார்படாஸை தாக்கிய சூறாவளி... ஹோட்டலில் முடங்கிய இந்திய வீரர்கள்... நாடு திரும்புவது எப்போது?

பார்படாஸில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாவும், பலத்த காற்று காரணமாக மின்விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

''அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது''

நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி... அதிர்ந்த பாஜக எம்.பி.க்கள்... இன்று பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!

நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Rahul Gandhi: ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு பாடம்… மக்களவையில் ராகுல் காந்தி அதிரடி!

ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுப்பு... எதிர்க்கட்சிகள் அமளி-வெளிநடப்பு... மக்களவையில் பரபரப்பு!

டெல்லி: நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுத்ததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பார்படாஸில் கடும் சூறாவளி... விமான நிலையம் மூடல்... நாடு திரும்ப முடியாமல் இந்திய வீரர்கள் தவிப்பு!

பார்படாஸ்: பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தீபாவளி ரயில் புக்கிங்.. 2 நிமிஷம்தான் உடனே வெயிட்டிங் லிஸ்ட்.. ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு எப்போ?

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு ரயில்கள் இயக்கினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்... 6 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!

காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்... பல்வேறு விஷயங்களில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி: 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன...எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலாகி உள்ளது.

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!

மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு... பெரும் கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி!

ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார்.

மதுரைக்காரங்க எப்பவுமே வேற லெவல்தான்... இந்திய அணியின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் நமது அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.

சொந்த கட்சியினரே ஜோ பைடனுக்கு எதிர்ப்பு... அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் மனைவி போட்டி?

முதல் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, ஜோ பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு, அதிபர் பைடன் பதிலடி கொடுக்காதது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அட! சென்னையிலும் மழை கொட்டப் போகுதா... குடையை எடுத்து ரெடியா இருங்க மக்களே!

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

'அம்மாவின் பெயரில் மரம் நடுங்கள்'.... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்''

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

'கிக்’குக்காக கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்... அமைச்சர் துரைமுருகன் பேச்சு... வானதி சீனிவாசன் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சர்களே மதுப்பழக்கத்தை ஆதரித்து பேசும் சூழல் நிலவுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்... வெற்றி யாருக்கு?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர்.

கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.