K U M U D A M   N E W S
Advertisement

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை நேசிக்கக்கூடியவர்... ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்... மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Devara BoxOffice: ஏமிரா இதி? பாக்ஸ் ஆபிஸில் சறுக்கிய தேவரா... இரண்டாவது நாள் வசூல் இப்படி ஆயிடுச்சே!

ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் தேவரா வசூல் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

Meiyazhagan Box office: ஏறுமுகத்தில் மெய்யழகன் வசூல்... இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் கலெக்ஷன் முதல்நாளை விட இரண்டாவது நாளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.

துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

”ஒரே நாடு ஒரே தேர்தல் இதுக்காகத்தான்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு !

MK Stalin on One Nation One Election: மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஃபைனான்ஸ் கம்பெனிக்கு அழைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்கள் கைது

நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றபோது, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை கடற்படை அட்டூழியம் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

#JUSTIN || நாளை நாமக்கல் செல்கிறார் சங்கர் ஜிவால்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து விவகாரம். ஒரு கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாளை நாமக்கல் செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்