K U M U D A M   N E W S

Dengue Fever in Tamil Nadu : 'டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்' - மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : ''சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Wayanad Landslide : நிலச்சரிவு மீட்பு பணி: 'ராணுவ வீரர்களுக்கு சல்யூட்'.. 3ம் வகுப்பு 'குட்டி' பையன் நெகிழ்ச்சி கடிதம்!

Wayanad Landslide Rescue Operation in Kerala : ''நீங்கள் பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்கி பாலம் கட்டிய வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். நானும் ஒருநாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என்னுடைய நாட்டை காப்பேன். உங்களுக்கு எனது மிகப்பெரிய சல்யூட்'' என்று சிறுவன் கடிதத்தில் கூறியுள்ளான்.

Bangladesh Violence : வங்கதேசத்துக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை

Union Government on Bangladesh Violence : வங்கதேசத்தில் வன்முறை நடந்து வருவதால் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Anbumani Ramadoss : வட்டி கட்டியே வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள்.. 1,500 திரைப்படங்கள்.. ரூ.4,000 கோடி.. அன்புமணி வேதனை

Anbumani Ramadoss on Tamil Movie Producers : திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin : 'இனி இப்படி செய்யாதீங்க'.. ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஈழத்தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதா?.. பொங்கிய சீமான்.. அடுக்கடுக்கான கேள்வி!

''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Wayanad Landslide : 'பசுக்களை கொன்றதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்'.. பாஜக முன்னாள் எம்.பி சர்ச்சை பேச்சு!

Former BJP MP Gyan Dev Ahuja on Wayanad Landslide : ''கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பசுவதை செய்யும் இடங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது'' என்று பாஜக முன்னாள் எம்.பி கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளார்.