K U M U D A M   N E W S

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்... போரட்டத்தில் குதித்த அதிமுகவினர்.. ஸ்தம்பித்த சாலை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் தேதி மாற்றம்.. அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கழிவுநீரில் மூழ்கிய மதுரை... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பெட்ரோல் குண்டு வீசிய மாணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்

மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பேனர் வைத்த போது இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்... ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?- சீமான் சரமாரி கேள்வி

மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 04-11-2024 | KumudamNews

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்

#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News

#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News