K U M U D A M   N E W S

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்... ஏழு பேருக்கு எலும்பு முறிவு.... அடித்து துவைத்த பொதுமக்கள்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN : Bike Accident in Dindigul : "ஒரே இடி.." வினாடியில் இளைஞர் பலி - திக் திக் காட்சி | CCTV

இருசக்கர வாகனம் வேன் மீது உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இளைஞர்களின் பதறவைக்கும் காட்சிகள் வெளியானது.

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

கழிவறை மேற்கூரை இடிந்து விபத்து.. சாலை மறியலில் குதித்த மாணவர்கள்... புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ரயில் விபத்து.. விசாரணைக்காக 4 பேர் ஆஜர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

திடீரென வெடித்த டயர்.. லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து.. மாணவர்களின் நிலை?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2024-ல் அடிக்கடி ரயில் விபத்து.. நடுங்கும் மக்கள்..என்ன காரணம்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.