K U M U D A M   N E W S

8 ஆண்டுகளாக பணிக்கு வராமல் ஊதியம்.. சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

குண்டர் சட்டம்... தேவையான சட்டத் திருத்தம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுத்தல்!

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. அடி மேல் அடியால் கதிகலங்கிய லெபனான்!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

#JUSTIN : கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

Karu Palaniappan : விஜய் பெயரை சொன்ன கரு பழனியப்பன்... அதிர்ந்த அரங்கம்...

Karu Palaniappan About Thalapathy Vijay : உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெயரை இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Edappadi Palanisamy : அதை விஜய் சார் கிட்ட கேளுங்க - எடப்பாடி பழனிசாமி ஓபன் டாக்

Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் வந்தால் அழைத்து செல்வோம்.. இல்லையென்றால் அவ்வளவு தான் - தமிழிசை அதிரடி

நடிகர் விஜய் தேசியம் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.