K U M U D A M   N E W S

DMK

அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

பாலியல் வன்கொடுமை அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.