K U M U D A M   N E W S
Kumudam Ad

crime

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளின் காதலனைத் தாக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

இரிடியம் மோசடி: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் கைது - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடி மோசடி | Cyber Crime |Kumudam News

போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடி மோசடி | Cyber Crime |Kumudam News