கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகரில் வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது 3 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.