K U M U D A M   N E W S
Kumudam Ad

AI

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... பாத்து சூதானமா இருங்கப்பா....

தமிழ்நாட்டில் இன்று (அக். 22) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிர புயலாக மாறிய டானா... 14 மாவட்டங்கள்... 10 லட்சம் மக்கள்... பதற்றத்தில் ஒடிசா, மே.வங்கம்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் அதிர்வு? - பொறியாளர்கள் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நுண்ணிய விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு.. பதறியடித்த ஊழியர்கள்

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது

வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நிறைவு... அலுவலர்களை மோதியபடி நுழைந்த ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமுதம் செய்தி எதிரொலி; மதுரையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.

#BREAKING: வைத்திலிங்கத்தின் மகன்கள் நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் சோதனை | Kumudam News 24x7

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.