K U M U D A M   N E W S

AI

5வது நாளாக தொடரும் வேங்கைவயல் போராட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் பயன் இல்லை- நீதிமன்றம்

ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜப்தி செய்யப்பட்ட அரசு அலுவலகம்.. உட்கார சேர் கூட இல்லாமல் தவித்த அதிகாரிகள்

மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.

ED அலுவகத்தில் திமுக எம்.பி மீண்டும் ஆஜர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.

"மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை கைவிடவும்" - திருமா

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா

அண்ணா பல்கலை. விவகாரம் - ஞானசேகரனுக்கு பிப்.7 வரை...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு பிப்.7 வரை நீதிமன்றக் காவல்.