K U M U D A M   N E W S

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி

வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

புதிய வீடு இடித்து தரைமட்டம் - ஆட்சியரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

ஊராட்சிமன்ற தலைவருக்கு ஆதரவாக வாக்கு செலுத்தவில்லை என்ற காரணத்தால் தூண்டுதல் பேரில் புதிதாக கட்டிய வீட்டை அதிகாரியுடன் இடித்து தரைமட்டம் ஆக்கியதாக குற்றச்சாட்டு

தஞ்சாவூர் அருகே பாதை பிரச்சனை: மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்

பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீட்டில் புகுந்து தாக்குதல்: ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்தினர் மீது ரவுடி, திருநங்கைகள் கும்பல் வெறிச்செயல்!

சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிர்வாகிக்கு சேலை உடுத்திய பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மாற்றியமைத்து, புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் காங்.நிர்வாகி மீது பாஜகவினர் கோபம்

யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிஜிபி அலுவலகத்தில் புகார்

நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்