K U M U D A M   N E W S

மகாவிஷ்ணு விவகாரம்; போலீசார் அதிரடி திட்டம்!

மகாவிஷ்ணு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்

'மகாவிஷ்ணு கைது தவறு’ - வெளிப்படையாக பேசிய எல்.முருகன்!

மகா விஷ்ணுவை கைது செய்தது தவறு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வாய் பேச்சால் வந்த வினை.. மகாவிஷ்ணுவுக்கு இன்று மிக முக்கிய நாள்!

மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.