சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்
திமுகவின் பவள விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது - முதலமைச்சர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.
மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நமது கண்கள் முன் தோன்ற உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.