K U M U D A M   N E W S

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

புதிய கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் - விஜய்க்கு முதலமைச்சர் பதில்

வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்

10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில்  3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்...” விஜய்யை தாக்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என தவெக தலைவர் விஜய்யை தாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்தது எப்படி?- ஆய்வு அறிக்கை ஒப்படைப்பு

ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கவரப்பேட்டை ரயில் விபத்து... புதிய கோணத்தில் விசாரணையை துவக்கிய போலீஸ்

கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.