K U M U D A M   N E W S
Advertisement

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

மதுரையில் பிரசிதிப்பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கோவைக்கு வருகை தந்த விஜய்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி.. குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை ஆயுதங்கள் பறிமுதல்

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதிமுக பிரச்சாரத்தில் குழப்பம்...போச்சம்பள்ளியில் கோஷ்டி மோதலால் சலசலப்பு

அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தின்போது போச்சம்பள்ளியில் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

கருணாநிதி சொன்னதை பேரவையில் நினைவுகூர்ந்த அமைச்சர் துரைமுருகன்...உற்று கவனித்த முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.

இயல்புநிலை திரும்பும் பஹல்காம்.. தாக்குதலில் இருந்து மீண்டு வரும் மக்கள்!

பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா–அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

எடப்பாடிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.. ஆடிப்போன தயாநிதி மாறன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு.. புதிய சிக்கலில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.