K U M U D A M   N E W S

பெரியார் சிலை விவகாரம்... ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

டெண்டர் விடுவதில் முறைகேடு.. திமுக நிர்வாகி அராஜகம் - போலீஸார் முன்னிலையில் தாக்குதல்

பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விடும்போது, திமுக நிர்வாகி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, போலீஸார் முன்னிலையிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி..  அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவு 

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நூல் வெளியீட்டு விழா.. விஜய் பங்கேற்பதால் நிகழ்ச்சியை புறக்கணித்த திருமாவளவன்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்

திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்... வியாபாரிக்கு ஆபாச அர்ச்சனை

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள இரும்புகடையில் ஓசியில் இரும்பு பைப் கேட்டு திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்.

‘திருமணம் செய்துகொள்.. முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ - மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, ஆசிட் அடித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ சீட்டுக்கு அடித்தளம்? நாதகவை குறிவைக்கும் அசைன்மெண்ட்?

நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறி திமுகவில் இணைவதன் பின்னணியில், திமுக மாணவரணியின் மாநில தலைவர் ராஜிவ்காந்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு திமுக துணை போனது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.