K U M U D A M   N E W S
Advertisement

போர்

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் என்று கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசி வாயிலாக பேசியபோது மறுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை.. அதிபரிடம் தெரிவித்த பிரதமர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? பின்னணி என்ன?

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி பாஸ்போர்ட்டில் பயணம்.. இலங்கையைச் சேர்ந்த தாய்-மகள் கைது!

இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மகள் சென்னையிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்றுவிட்டு, திரும்பிய போது போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

ஜி7 உச்சி மாநாடு: கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

100 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்: 'ரைசிங் லயன்' ஆபரேஷனுக்கு பதிலடி!

இஸ்ரேல் நடத்திய "ஆப்ரேஷன் ரைசிங் லயன்" என்ற ரகசிய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது பதில்தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்காக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.