K U M U D A M   N E W S

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடரும் பாலியல் குற்றச்சாட்டு.. 25 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்..!

அரசு பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 25 ஆசியர்களை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!

உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது. 

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் செய்ததை கண்டித்து போராட்டம்.

பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000- ஆண் குழந்தைக்கு பசு மாடு: எம்.பி அதிரடி அறிவிப்பு

தனது தொகுதியில் 3-வது குழந்தையாக பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000, ஆண் குழந்தை பெற்றால் பசு மாடு வழங்கப்படும் என ஆந்திர எம்.பி அளித்த வாக்குறுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது.. ஸ்டாலினை விளாசிய தமிழிசை

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்சினைக்காக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பு..!

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை கண்ட்ரோலில் மாஜிக்கள்? பாஜக வசமாகும் கொங்கு..? திருப்புமுனை ஏற்படுத்திய திருமணம்..!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாஜிக்கள் அண்ணாமலை வசம் வந்துவிட்டதாகவும், அதிமுகவின் பலமாக கருதப்படும் கொங்கு மண்டலம் பாஜக கண்ட்ரோலில் சென்றுவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபர்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்..

"பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கவில்லை"

பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் இருக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி