K U M U D A M   N E W S

"துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது.." ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயர் நீதிமன்றம் காட்டம்!

Tuticorin Sterlite Gun Shoot Issue : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 இடங்களில் வினாத்தாள் கசிவு.. நீட் மறு தேர்வு கிடையாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Neet Exam Hearing In Supreme Court : ''இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

410 ஆசிரியர்கள் பணி நியமனம்.. நீதிமன்ற உத்தரவால் பயனடையப்போகும் பட்டதாரிகள்..

Chennai High Court Order To TN Govt : 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Neet: “நீட் மறுதேர்வு நடத்த முடியாது... முடிவுகள் வெளியிட வேண்டும்..” உச்ச நீதிமன்றம் அதிரடி!

Supreme Court Order on NEET Exam : நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை, நாளைக்குள் (ஜூலை 20) மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து

மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஓவர் டோஸ்.. தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''