K U M U D A M   N E W S

'இந்தி கற்றுக் கொள்ளுங்கள்'... கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு... கொதிக்கும் நெட்டிசன்கள்!

''நடராஜன் கிரிக்கெட்டுக்காக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அவர் இந்தி மொழியை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?''

'மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்'... ரஷ்யாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த புதின்!

''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?... 'திமுக' அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''

ஓவர் டோஸ்.. தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

தனக்கு தொடர்பு இல்லை; அமலாக்கத்துறை கைதை ரத்துசெய்ய வேண்டும் - ஜாபர் சாதிக் மனு ஒத்திவைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  ஜாபர் சாதிக் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்கதுறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு - சிபிஐ முக்கிய உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.