K U M U D A M   N E W S

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஜிவி பிரகாஷின் 700வது பாடலாம்...’அமரன்’ படத்தின் அடுத்த அப்டேட்...!

அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.

துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் நியமனம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்

தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

சொத்து வரி உயர்வை கண்டித்து அக்.8ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் சமூகநீதி நடைமுறையில் இல்லை – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டில் சமூகநீதி பேசப்படுகிறதே தவிர, அது நடைமுறையில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் வெட்கமும், வேதனையும் படுகிறேன் என தெரிவித்தார். 

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.... நல்லா வெளுக்கப்போகுது!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 2) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசாரணை கைதி மரணம் - காவல்துறை விளக்கம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சிறை கைதிகளின் பேச்சு பதிவு செய்யப்படுகிறதா?.. வழக்கறிஞரின் புகாருக்கு அரசு பதில்

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே  வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது