K U M U D A M   N E W S

ஒரு காலத்துல பாட்ஷா! இப்போ மாணிக்கம்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்..

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வயிற்றில் புளி கரைத்தவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். "சொல்லுங்க.. சொல்லுங்க..சொல்லுங்க..நீங்க யாரு.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்ற வசனத்திற்கேற்ப, தற்போது மாணிக்கமாக இருக்கும் பாட்ஷா அரசியலில் என்ட்ரி கொடுக்காமல் எக்சிட் ஆனதும் ஒரு வரலாறு தான்.

சிறைத்துறை அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பாரதியின் நூல்களின் முழு தொகுப்புகள்.. இன்று வெளியிடுகிறார் பிரதமர் ..!

மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.

பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்.. பிரதமர் வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

கொடி கம்பத்தில் பெயரில்லை... தற்கொலைக்கு முயன்ற த.வெ.க நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடி கம்பத்தில் பெயரில்லை என்ற விரக்தியில், த.வெ.க நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.