K U M U D A M   N E W S

திமுக, நாதக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

மாடு குறுக்கே வந்து விபத்து.. பறிபோன சிறுவனின் உயிர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு

திடீரென வெடித்து சிதறிய குக்கர்.. முதியவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,895 கோடி மதிப்பில் 3-வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரரின் கழுத்தில் குத்திய காளை

அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அருண்குமாரின் கழுத்தில் காளை குத்தியது.

காணும் பொங்கல் – இறைச்சிக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இறைச்சிக் கடைகளில் கூட்டமாகக் குவிந்த மக்கள்.