K U M U D A M   N E W S
Kumudam Ad

#BREAKING | TASMAC Scam | பாஜகவினர் 1,250 பேர் மீது பாய்ந்த வழக்கு | TN BJP Protest | Annamalai

சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு

அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறதா?...அடுத்த வருடம் கேளுங்கள்...மழுப்பிய பிரேமலதா

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.

1521 கோடி.. 1222 வழக்கு.. பதிவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு,  ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பூக்குழி திருவிழா கொடியேற்றம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில்  பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Gold price: இறங்க மனமில்லாத தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பு; தேர்தல் ஆணையம் ஆலோசனை

வாக்காளர்கள் பட்டியலில் மோசடியை தடுப்பதாக வாக்காளர் அட்டையுடன், ஆதாரை இணைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

இனி ஓட்டர் ஐடியுடன் ஆதார் எண் ?... மத்திய அரசு மும்முரம்

ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை