K U M U D A M   N E W S
Advertisement

திமுக

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்தோம்.. செல்லூர் ராஜு பேட்டி

"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள் முருகன் – அமைச்சர் ரகுபதி

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திமுக நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் – அண்ணாமலை கண்டனம்

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.