K U M U D A M   N E W S

தமிழ்

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக-வும் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்து அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மாற்றம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். ..

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்

திருப்பதியில் இருந்து பழனிக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் போல் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் தரிசனம் எளிமையாக்கப்படும்  என்றும்  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாலியல் தகவலை மறைத்தவர்களுக்கு சொந்த ஜாமின்

சேலம், ஆத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தை மறைத்த விவகாரம்

"FOOD போன்றே FITNESS-ம் முக்கியம்" - முதலமைச்சர்

சமூக வலைதளங்களில் நிறைய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன - முதலமைச்சர்

காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு.. தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.