K U M U D A M   N E W S

தமிழ்

ரூம் புக் செய்யும் போது உஷாரா இருங்க... தமிழ்நாடு ஹோட்டல் பெயரில் நூதன மோசடி!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே? டிடிவி தினகரன் கேள்வி

அரசு பேருந்து விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

'முதல்வர் மருந்தகம்' அல்ல.. 'முதல்வர் மாவகம்'- அண்ணாமலை விமர்சனம்

அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ரீ ரிலீஸாகும் அருண் விஜய்யின் “தடையறத் தாக்க”

அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க” மீண்டும் திரைக்கு வருகிறது.

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள் முருகன் – அமைச்சர் ரகுபதி

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திமுக நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் – அண்ணாமலை கண்டனம்

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி நீட் தேர்வு குளறுபடி குறித்து ஆலோசித்து முடிவு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.