K U M U D A M   N E W S

தமிழ்

இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்ட விவகாரம்.. இருவர் அதிரடி கைது

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தைப்பூசம், தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்தும் ரயில் நிலையத்தில் ஓய்வறை வழங்க மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரயில் நிலைய ஓய்வறைக்கு முன்பதிவு செய்திருந்தும் அறை ஒதுக்க மறுத்ததால் நடைமேடையில் தங்கி அவதிக்குள்ளான இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது - அமைச்சர் சக்கரபாணி

பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

வேங்கைவயல் விவகாரம்.. மனுதாரர் வக்காலத்து பெற்றுள்ளாரா? - நீதிபதி கேள்வி

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.