K U M U D A M   N E W S

தமிழ்நாடு

” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்

அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் என்று பாராமல் சட்டையை பிடித்து, இழுத்து தாக்கும் அளவிற்க்கு என்ன நடந்தது? ’92A’ பஸ்ஸில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கொலையில் முடிந்த தகராறு.. மனைவி தலையில் ஒரே போடு! உடலை காரில் வைத்து சுற்றுலா

தென்காசியில் பெண்ணை கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசியை திணற வைத்துள்ள கொலை சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

"தவெகவுக்கு வாய்க் கொழுப்பு.." பெரியாருக்கு வராதது பி.கே.க்கு வருதா? சரமாரியாக விளாசிய சாட்டை..!

தவெகவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிக்க, அதற்கு தவெக பதிலடி கொடுக்க, அதற்கும் நாதக ரியாக்ட் செய்ய என சோஷியல் மீடியாவையே அரசியல் களமாக மாற்றி மோதிக் கொண்டு வருகின்றனர் நாதக மற்றும் தவெகவினர்... என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்.

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுத்து, ஏப்ரல் 8 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து விற்பனை செய்த பெண் கைது..!

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர். 

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்

மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி

கைது செய்யும் போது தப்பிக்க முயன்ற ரவுடிக்கு நேர்ந்த விபரீதம்

கரூரில் போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயற்சித்து படுகாயமடைந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு