K U M U D A M   N E W S

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்திற்கு திடீர் விசிட் அடித்த திருமாவளவன்.. பின்னணி என்ன?

மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடரும் அறிவிக்கபடாத மின்வெட்டு.. நள்ளிரவு வேளையில் பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்!

காஞ்சிபுரம் பகுதிகளில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

விசிக பிரமுகர் படுகொலை... போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு

திருவண்ணாமலை அருகே விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விசிகவினர் மற்றும் உறவினார்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன விபத்து: சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!

தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி மீது, தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூரில் சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

'குட் நைட்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

'குட் நைட்' பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண் கைது - வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சிறுமியை தாக்கிய பெண் கைது